மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல ரோபோ அறிமுகம்

மும்பை: மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் வகையில் ரோபோ டிராலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தங்களை காத்து கொள்ள கவச உடைகளை அணிய வேண்டி உள்ளது. தொடர்ந்து நாள் முழுவதும் அதனை கழற்றாமல் வேதனையுடன் பணிபுரியும் சூழல் உள்ளது. இது தவிர்த்து நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இந்நிலையில் இதற்கு தீர்வு ஏற்படும் வகையில் மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் இன்று இந்த ரோபோ டிராலி பயன்பாட்டுக்கு வந்தது.

அங்கிருக்கும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டது. இதனால், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களிடம் இருந்து செவிலியர்கள் உள்ளிட்டோர் விலகி இருக்க முடியும். அவர்களுக்கு ஏற்படும் வைரஸ் பரவல் ஆபத்தும் குறையும். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு கொரோனா தொற்றைக் கண்டறியும் ஸ்மார்ட் ஸ்வாப் ரோபோவைக் கோவை பொறியாளர் வடிவமைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Related Stories: