×

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி: இதுவரை 5,454 போலீசார் பாதிப்பு!

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை உள்ளன. மராட்டியத்தின் மும்பை, புனே மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மராட்டியத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,454 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 70 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,06,619- ஆக அதிகரித்துள்ளது. மேலும் 151 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,822-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : policemen ,Maharashtra , Maharashtra, police, Corona, Mumbai
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு