×

வருசநாடு அருகே செந்நாய் கடித்து கடமான் பலி

வருஷநாடு: வருசநாடு அருகே செந்நாய் கடித்ததில் கடமான் பலியானது. தேனி மாவட்டம் வருசநாடு அருகே மண்ணூத்து அடுத்துள்ள மேகமலை வனப்பகுதியில் கடமான்கள் அதிகளவில் உள்ளன. நேற்று காலை 3 வயது மதிக்கத்தக்க ஆண் கடமான் ஒன்று செந்நாய்களால் தாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் மண்ணூத்து கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு பொதுமக்களை பார்த்து பயத்தில் தெருக்களில் ஓடிய கடமான் இறுதியாக மயக்கம் டைந்து கீழே விழுந்தது.

மேகமலை வனத்துறையினர் மண்ணூத்து கிராமத்திற்கு சென்று கடமானை மீட்டு மஞ்சனூத்து சோதனை சாவடிக்கு எடுத்துச் சென்றனர். கோம்பைத்தொழு கால்நடை மருத்துவர் வெயிலான் வரவழைக்கப்பட்டு கடமானுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது செந்நாய்கள் தாக்கியதில் ரத்தம் அதிகளவில் வெளியேறி கடமான் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடமான் பரிசோதனை செய்யப்பட்டு சோதனைச் சாவடி வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.


Tags : Maoist ,Varshanadu Varshanadu , Maoist kills ,cattle , Varshanadu
× RELATED மாவோயிஸ்ட் நடமாட்டம் வன எல்லை வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு