மூணாறு: மூணாறு அருகே கிரானைட் குவாரி திறப்பு விழாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி ஆபாச நடனம் நடந்தது. இதில் பங்கேற்ற 48 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை பகுதியில் கிரானைட் குவாரியை தமிழ்நாடை சேர்ந்த ஒரு நபர் விலைக்கு வாங்கியுள்ளார். குவாரி திறப்பு விழாவிற்கு பிரபல அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து ராஜபாறை பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் குவாரி திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.