புதுச்சேரியில் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்: மருத்துவர் உட்பட 3 பேர் கைது!!!

புதுச்சேரி:  புதுச்சேரியில் ஜபருல்லா என்பவரை கூலிப்படை வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாவட்டம் கலகசெட்டிகுளம் அடுத்த தென்றல் நகரில் ஜபருல்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் சுடுதண்ணீர் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த கூலிப்படையினர், பயங்கர ஆயுதங்களை கொண்டு ஜபருல்லாவை தாக்கியுள்ளனர்.

அப்போது, ஜபருல்லாவின் கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இதனைத்தொடர்ந்து, அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் பின்புறத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது மறைத்திருந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜபருல்லாவை கண்டு வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், ஜபருல்லாவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு ஜபருல்லாவை அரிவாளால் சரமாரியாக தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதே தெருவில் ஜபருல்லா வீட்டின் அருகே ஒரு மருத்துவர் வசித்து வருகிறார். மருத்துவர் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர் அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் கூலிப்படையை வைத்து ஜபருல்லாவை தாக்கியது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, டாக்டர் குமார், அவரது ஆதரவாளர்கள் நரேஷ் மற்றும் கோபி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து கூலிப்படை நபர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: