டெல்லி : டெல்லியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நோயாளிகள் அவர்களது உறவினர்களுடன் வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியை அடுத்துள்ள சர்தார்ப்பூரில் 10,000 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் உலகின் மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சுமார் 1,10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்களுடன் டாப் மூலம் வீடியோ காலில் பேசும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
டெல்லியில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வீடியோ காலில் பேசும் வசதி அறிமுகம்!!
- உலகம்
- தில்லி
- மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மருத்துவமனை
- மருத்துவமனை
- கொரோனா நோயாளிகள்
- வீடியோ அழைப்பு வசதி