மங்களூரு: மங்களூருவில் பெய்த கனமழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு நான்கு வீடுகள் மண்ணில் புதைந்தது. இச்சம்பவத்தில் அண்ணன், தங்கை இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தென்கனரா மங்களூரு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மதியம் பலத்த காற்றுடன் பெய்த கனமழை பெய்தது. அப்போது, புறநகரில் உள்ள குருபுரா கிராமத்தில் மண் சரிவு ஏற்பட்டு நான்கு வீடுகள், ஒரு டிராக்டர், இரண்டு பைக், ஒரு ஆட்டோ மண்ணில் புதைந்தது. அதேபோல், விடுமுறையில் உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அண்ணன், தங்கையான சப்தான் (16) மற்றும் சஹலா (10) ஆகியோர் மண்ணில் சிக்கி கொண்டனர். இது குறித்து கதிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.