×

ஒடிசாவில் 4 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

புவனேஸ்வர்: ஒடிசாவின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம், துமுடிபந்தா வனப்பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று அதிகாலை அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 4 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயத்துடன் தப்பி விட்டதாகவும் போலீஸ் டிஜிபி அபே கூறி உள்ளார். மேலும்ல மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து ஏராளமான வெடி பொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Maoists ,Odisha , Orissa, 4 Maoist, shot dead
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18...