மேம்பாலத்திலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள பேசின் மேம்பாலம் மீது நேற்று காலை 9 மணியளவில் நடந்து சென்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண், திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். அருகிலிருந்த போக்குவரத்து போலீசார் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதற்கட்ட விசாரணையில், கொடுங்கையூரை சேர்ந்த கோமதி (30) என்பது தெரிந்தது. இவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: