×

ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் கெமிக்கல் கம்பெனி அருகில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் (35) என்பவர் வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் எந்த ஊர் என தெரியவில்லை. உடலில் ஆங்காங்கே சிறு காயங்கள் உள்ளதால், அவரை யாராவது அடித்து கொலை செய்தனரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Male, corpse, rescue
× RELATED கோவையில் மோடி ரோடு ஷோவில் பள்ளி...