×

ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா உறுதி

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது முதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி தொடர்ந்து மறைந்திருந்து தாக்குதல் நடத்தி வந்தான். நீண்ட நேர மோதலுக்கு பின்னர் நள்ளிரவில் இரண்டாவது தீவிரவாதியையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

என்கவுண்டரில் கொல்லப்பட்ட இருவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் எனவும், அதில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவன் எனவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளுடன் நடந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமடைந்ததாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.



Tags : militants ,Corona ,area ,Gulkham ,Jammu ,Kashmir , Terrorist, Corona
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி