கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி வீரரான குசால் மெண்டிஸ் கார் விபத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான இலங்கை பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் தனது காரில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 64 வயது முதியவர் மீது மெண்டிஸ் கார் மோதியுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குசால் மெண்டிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புறநகர் பகுதியான பனாதுராவில் இந்த விபத்து நிகழ்ந்தது. கைது செய்யப்பட்ட குசால் மெண்டிஸ் இன்று மேஜிஸ்ட்ரேட் முன்னால் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.