×

அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சேலம், கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.


Tags : Meteorological Department ,coast ,Northern Puducherry , Rainfall , Northern Puducherry ,coast ,next 48 hours
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை மையம் தகவல்