×

பண்ணாரி சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாட்டம்

சத்தியமங்கலம்: தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாடுவதால் ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு காவல்துறை, வனத்துறை, வட்டார போக்குவரத்து துறை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளதால் தற்போது வருவாய் துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் தற்காலிகமாக சோதனைச் சாவடி அமைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றையானை காவல்துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடி அருகே சாலையில் நடமாடியது யானை நடமாடுவதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தினர் யானை சிறிது நேரம் சோதனைச்சாவடி பகுதியில் உள்ள சாலையில் உலாவி விட்டு பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. யானை சோதனைச்சாவடி பகுதியில் உலா வந்ததால் சோதனைச்சாவடி பணியில் இருந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Pannari Checkpoint Pannari Checkpoint ,Single Elephant Walking , Bannari checkpoint, single elephant, walk
× RELATED பண்ணாரி சோதனைச்சாவடியில் ஒற்றை யானை அட்டகாசம்