தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களையும் மிரட்ட தொடங்கியது கொரோனா: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு தொற்று உறுதி

சென்னை: தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த  எண்ணிக்கை 1,07,001 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,214 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 44,956 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1450 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,309 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 24,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 37 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 1033 ஆக உள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 94 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 12,49,317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 65,604 பேரும், பெண்கள் 41,375 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 22 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

* தமிழகத்தில் 12 வயதிற்குள் 5277 பேரும், 13 வயதிலிருந்து 60 வயதிற்குள் 88847 பேரும், 60 வயதிற்கு மேல் 12877 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: