சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஒரு புதிய திட்டத்தை செய்யப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அது சென்னையின் உள்ள அனைத்து மண்டலங்களிலும் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடமாடும் மருத்துவ குழுக்களை மாநகராட்சி அமைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தமிழகத்திலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை திகழ்ந்து வருகிறது. சென்னையில் கொரோனா வைரசால் இதுவரை 66,538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று மட்டும் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,842 பேர் ஆகும்.