குல்காம்: காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள ஆரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பபிதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.