வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நவம்பர் 30 வரை நீட்டிப்பு

மும்பை: 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வருமான வரித்துறை கடந்த ஏப்ரல் 8 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் வரி செலுத்திய கிட்டத்தட்ட 20 லட்சம் பேர்களுக்கு ரூ.62,361 கோடியை ரீபண்டு தொகையாக வழங்கி உள்ளது. இதில் தனிநபர் வருமான வரி செலுத்திய 19.07 லட்சம் பேருக்கு ரீபண்டு தொகையாக 23,454 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கார்ப்பரேட் வரி செலுத்திய 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 38,908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்துக்கு 76 பேருக்கு என்ற வேகத்தில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஜூன், 30ம் தேதி வரை ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த 56 நாட்களில் மொத்தம் 62 ஆயிரத்து 361 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ரீபண்டு தொகை வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: