கொரோனாவுக்கு 'சங்கு'ரெடி : ராயபுரம், திருவிக நகரில் முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி திரவம் தெளிப்பு ; 10 -12 வினாடிகளில் வைரசை அழிக்கும்!!

சென்னை : சென்னையில் கொரோனா வைரஸை அழிக்க இயற்கை நுண்ணயிர்க் கொல்லி திரவம் டிரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. ரசாயன திரவத்துக்கு மாற்றாக முதல்முறையாக இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி தயாரிக்கப்பட்டுள்ளது.

*பெங்களூரு நிறுவனம் தயாரித்துள்ள இயற்கை நுண்ணுயிர் கொல்லி கொரோனாவை அழிக்க திறன் கொண்டது.

*இந்த இயற்கை நுண்ணுயிர் கொல்லியானது, வீடுகளின் சமையல் அறையில் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகளின்மீது அறைக்கப்பட்ட ஆரஞ்சு விழுதுகளை பரப்பி 90 நாட்களுக்கு அதை பதப்படுத்தி மேலும் சில இயற்கை பொருட்களை கலந்து தயாரிக்கப்பட்டது ஆகும்.

*எனவே,  மனித உடலில் இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி பட்டாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.   

*முதல்கட்டமாக சென்னை ராயபுரம், திருவிக நகரில் இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி தெளிக்கப்படுகிறது.5 டிரோன்கள் மூலம் ராயபுரம், திருவிக நகரில் இயற்கை நுண்ணுயிர்க் கொல்லி திரவம் தெளிக்கப்படுகிறது.  

*இந்த பரிசோதனைக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் துணை அமைப்பான ‘தக்‌ஷா’வும் துணை நிற்கின்றன. அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தின் டிரோன்கள் மூலம் ‘தக்‌ஷா’ அமைப்பினர் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

*கொரோனா வைரஸ் 20 நானோ மைக்ரான் எடை அளவு கொண்டது என்று ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, ஏ.சி. போடப்பட்ட அறைகளில் இது காற்றில் அப்படியே உலாவுவதால் எளிதில் மற்றவர்களுக்கு பரவுகிறது.

*அடுக்குமாடி குடியிருப்புகளில் 4-வது மாடியில் இருக்கும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து இருந்தால், அவர் தும்மும் போதும், இருமும் போதும் வெளிவரும் கிருமியானது 5 மணி நேரம் வரை காற்றில் நிற்கும் தன்மை கொண்டது.

*பொதுவாக ராட்சத எந்திரங்கள் மூலம் 600-க்கும் மேற்பட்ட மைக்ரான் எடை அளவில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதால் அவை உடனடியாக தரையில் விழுந்துவிடுவதால் காற்றில் பரவி நிற்கும் கொரோனா வைரசை அழிப்பது சிரமம்.

*ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் டிரோன்களின் ‘அல்ட்ரா லோ வால்யூம்’ மூலம் புகை போன்று 50 முதல் 80 மைக்ரான் அளவில் தெளிப்பதால் (இயற்கை நுண்ணுயிர் கொல்லி)கிருமி நாசினியும் காற்றில் 3 மணி பறப்பதுடன் 10 முதல் 12 வினாடிகளில் கொரோனா வைரசை அழிக்கவும் முடியும். ‘அல்ட்ரா லோ வால்யூம்’ முறையானது அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ள டிரோன்களில் மட்டுமே பயன்படுத்தும் முறையாகும்.

Related Stories: