×

காதலுக்கு தந்தை எதிர்ப்பு மகள் தற்கொலை

ஆவடி: ஆவடி, ஸ்ரீ தேவி நகரை சேர்ந்தவர் இளங்குமரன். பாதுகாப்பு துறை ஊழியர். இவர் மனைவி பிரிந்து வாழ்கிறார். இவரது மகள் திவ்யா (18). போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதல் ஆண்டு படித்து வந்தார். திவ்யா, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில், திவ்யா, தன்னுடன் படிக்கும் சக மாணவனை காதலித்துள்ளார். இந்த விவரம் அவரது தந்தைக்கு தெரியவர மகளை கண்டித்துள்ளார். எனவே திவ்யா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் திவ்யா, விடுதியின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், திவ்யா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : Love, paternal opposition, daughter suicide
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...