×

ஊரடங்கில் வெளியே செல்லாதே என அண்ணன் கண்டித்ததால் தங்கை தற்கொலை

திருநின்றவூர்: திருநின்றவூர் கொட்டாம்பேடு பகுதியில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மகள் ரோஜா (17). பொன்னேரி, அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கால் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரோஜா வீட்டில் இருந்துள்ளார். மேலும், அவர் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தொற்று ஏற்பட்டும் எனக்கூறி அண்ணன் சங்கர் கண்டித்துள்ளார். இதனால், ரோஜா மனமுடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரோஜா, வீட்டில் இருந்த கொக்கு மருந்து எடுத்து சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார். உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரோஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Tags : brother ,suicide , In curfew, don't go out, brother, brother suicide
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...