×

பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது

பிரேசிலியா: பிரேசிலில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 48,105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களையும் சேர்த்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  15,02,424 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து ஏற்பட்ட இரண்டாவது அதிகபட்ச தினசரி தொற்று எண்ணிக்கை இது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் தேதி அதிகபட்சமாக 54,771 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் ஒரே நாளில் 1,252 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கை 62,045 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 9,16,147 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5,24,232 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Brazil ,Corona , Corona, Brazil
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...