விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமனம்!!!

விருதுநகர்:  விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிப்பதவியில் அமர அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தார். அப்போது, இவர் கட்சியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்துள்ளார்.  அதாவது, இவர் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளார். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளையும் இவர் பதிவிட்டுள்ளார்.

இதனால் கட்சிக்கு தர்மசங்கடம் நிவுவதால், கடந்த 22ம் தேதி விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டார். அப்போது, விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக, செயலாளர் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக ஒருவர் நியமிக்கப்படும் வரை ராஜேந்திர பாலாஜி பொறுப்பில் இருந்து மாவட்ட பணிகளை கவனித்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: