விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிப்பதவியில் அமர அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வந்தார். அப்போது, இவர் கட்சியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, இவர் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்துள்ளார். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளையும் இவர் பதிவிட்டுள்ளார்.