செங்கல்பட்டில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் 11 பேர் பலி...! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு!!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் மட்டும் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், செங்கல்பட்டில் கொரோனா தாக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்று வருகிறது. அதிலும் கடந்த 2 தினங்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக பரவி உள்ளது. தற்போது இன்று மட்டும்  291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், செங்கல்பட்டில் பல்லாவரம், தாம்பரம் மற்றும் வண்டலூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள்,  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல், அருகே உள்ள மாமண்டூர் மற்றும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டில் சிகிச்சை பெற்று வந்த சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையிலும், மற்ற சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், செங்கல்பட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் விவரங்களை சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவிப்பதில் தாமதம் காட்டுவதாகவும்,  மேலும், நகராட்சி அதிகாரிகள் போதுமான தடுப்பு பணிகளில் ஈடுபடவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: