சென்னை: நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.