ஆவடி: ஆவடி, புதிய ராணுவ சாலை மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் மொபட்டை தள்ளிக்கொண்டு சாலையில் வந்து கொண்டிருந்தார். இதனையடுத்து, போலீசார் அவனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் மொபட்டின் சீட்டை தூக்கி சோதனை செய்தனர். அப்போது உள்ளே ஒரு பெரிய பொட்டலம் இருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பிரித்து பார்த்த போது கஞ்சா என தெரிந்தது.