பூந்தமல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பூந்தமல்லியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.