சென்னை: வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தை சேர்ந்த பலரும் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கும் நிலையில், அவர்களை திரும்ப அழைப்பதற்கான முயற்சிகளில் மாநிலத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை. இதுகுறித்து, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அயல்நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்களை அழைத்துவர வேண்டும் என கோரப்பட்டது. 10 மடங்கு அதிக கட்டணமும் தனிமைப்படுத்தலுக்கான ஓட்டல் கட்டணமும் உள்ளடக்கிய சார்ட்டர்டு விமானங்களில் வரும் பயணிகளை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்கிறது என்பது நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
வெளிநாடு வாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப ஏற்பாடு செய்க: மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- தாயகத்திற்கு
- தமிழர்கள்
- நிலை
- அரசாங்கங்கள்
- வீட்டில்
- எம்.கே. ஸ்டாலின்
- மாநில அரசுகள்
- மத்திய
- முல்லா ஸ்டாலின்