சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வந்தவாசியைச் சேர்ந்த வினாயகம் (42) என்பவர் சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் உள்ளூர் தனியார் கிளினிக் மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இன்னொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். காய்ச்சல் குறையாத நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு கொரோனா ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நோய் முற்றியிருந்ததால் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தார்.