×

அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி ட்விட்

சென்னை: அறந்தாங்கி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Palanisamy Dwight , Alamtangi, girl child molestation, criminals, action, Chief Minister Palanisamy
× RELATED தற்போதைய சூழலில் வீட்டில் இருப்பது...