×

வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கபடும்...! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை : வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சட்டப்படிப்பை முடிப்பவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற 4 ஆண்டுகள் தேவைப்படுவதால் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான  தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.

கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் என்பது தேவைப்படுகிறது. இக்காலகட்டத்தில் சுமார் 4 ஆண்டுகள் பல வழக்கறிஞர்கள் மிகவும் கஷ்டபட்டு, வறுமையில் வாடி வருகின்றார்கள். இந்த நிலையில் தங்களை வழக்கறிஞர்களாக நிலை நிறுத்திக் கொள்ளாமல்  மாற்று தொழிலுக் தமிழகத்தில் வரக்கூடிய இளம் வழக்கறிஞர்களுக்கும் உதவி செய்யும் நோக்கோடு தமிழக முதல்வரால் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ 3000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முதல்வரின் அறிவிப்பால் இளம் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : lawyers ,Palanisamy ,Announcement ,Chief Minister , Poverty, Young Lawyers, Scholarships, Chief Minister Palanisamy
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்