×

நீடிக்கும் விலங்குகள் வன்கொடுமைகள்....மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்..!!

கோவை: மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியூர் வனப்பகுதி அருகே உள்ள தனியார் நிலத்தில் யானை சுட்டுக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.பெண் யானை சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இருவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையில் அடுத்தடுத்து 2 யானைகள் உயிரிழந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இடதுபக்க காதில் சிறு காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில், பெண் யானை உயிரிழந்தது.பெண் யானைகள் இறப்பு குறித்து விசாரித்து வரும் நிலையில், மேலும் ஒரு யானை உயிரிழந்து உள்ளது.லிங்காபுரம் வனப்பகுதியில் மேலும் ஒரு பெண் யானை ஒன்று இறந்து கிடந்ததால் வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த மாதம் கேரளாவில் பாலக்காடு பகுதியில் கர்ப்பமாக இருந்த பெண் யானை ஒன்று சமீபத்தில் உயிரிழந்தது. பட்டாசுகள் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தினை உண்டதால் யானையின் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் உணவு உண்ணாமல் தவித்து வந்த யானை ஒரு ஆற்றில் இறங்கி நின்று கொண்டே உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த பெண் யானை, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mettupalayam Post-mortem ,Mettupalayam , Wild, elephant, female elephant
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது