மாதனூர் அருகே சாராயம் காய்ச்ச பதுக்கிய 2 டன் வெல்லம் பறிமுதல்

மாதனூர்:  மாதனூர் அருகே சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கியிருந்த 2 டன் வெல்ல மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் மற்றும் போலீசார் முத்துக்குமரன் மலைஅடிவாரத்தில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, ஓரிடத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த 45 மூட்டைகளை கண்டனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த ஒருவர் தப்பியோடினார்.

தொடர்ந்து அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டு இருந்த 2 டன் வெல்ல மூட்டைகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு ெசன்றனர். பின்னர், தப்பியோடிய அதேபகுதியைச் சேர்ந்த ஜெயபால் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories: