பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது, பாலியல் வன்கொடுமை கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும் : மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை : பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

மீண்டும் ஒரு சிறுமி!

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது!

பெண்கள்-  குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது!

இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: