திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 845 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 16 ஆயிரத்து 097 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8586 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7313 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 198 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.