டெல்லி : டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கியது.கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பிளாஸ்மா அளிப்போர் 1031 8800007722ல் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா கொடை அளிப்போருக்கு வீடு தேடி வந்து பாராட்டு பத்திரம் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.