மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடிக்கு- க்கு மாற்றப்பட்ட பிறகு என்ன நடந்தது என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கேஸ் டைரி குறித்த முக்கியமான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்ட நிலையில், கைது செய்தவர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள் என்று சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.