×

தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவராகிறார் என தகவல்

தூத்துக்குடி : தந்தை-மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை அப்ரூவராகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி அப்ரூவராக மாறிய நிலையில் பால்துரையும் சிபிசிஐடி சாட்சியாக மாறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தீவிரமாக தேடிவந்த சிபிசிஐடி போலீசார் நள்ளிரவில் இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags : Balturai Abrula ,Sattankulam , Father, Son, Murder, Case, Satanic, Special, Assistant Analyst, Balturai, Abrew
× RELATED தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக...