வாஷிங்டன்: ஹாங்காங்கில் சீனா அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரமாகி உள்ளது. ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என சீனா அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இந்த சட்ட மசோதா கடந்த மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலகளவில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியுள்ள புதிய தேசிய பாதுகாப்பு சட்டம், ஹாங்காங்கின் சுயாட்சியை அழிக்கும் நடவடிக்கையாகும்.