புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூரான், செல்வி தம்பதி. இவர்களது 7 வயது மகள் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணவில்லை. எங்கு தேடியும் அவர்களது மகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்தனர். இன்று மாலை சிறுமியின் வீட்டின் பின்னால் தண்ணீர் இல்லாத செடிகள் அடர்ந்த குளத்தில் சிறுமி ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்தவர்கள் உடலை மீட்டுள்ளனர்.