ஆட்டோ டிரைவருக்கு குண்டாஸ்

திருவள்ளூர்: பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (30). ஆட்டோ டிரைவர். இவரை, சில நாட்களுக்கு முன் வழிப்பறி வழக்கில் மணவாளநகர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது, இரண்டு கொலை முயற்சி வழக்குகள், அடிதடி, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து, சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி அரவிந்தன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

இதற்கான நகலை மணவாளநகர் இன்ஸ்பெக்டர் கன்னையா, புழல் சிறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தார்.

Related Stories: