காசியின் தந்தை திடீர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி (26). சென்னை பெண் டாக்டர் உள்பட ஏராளமான இளம்பெண்களிடம் சமூக வலைதளங்களில் பழகி, அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைதாகி உள்ளார். இந்த வழக்கில் காசியின் கூட்டாளிகளான  டைசன் ஜினோ (19), தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காசியின் லேப் டாப் மற்றும் செல்போனில் பல ஆதாரங்கள் அழிக்கப்பட்டு இருந்ததை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், ஆதாரங்கள் அழித்த தற்காக காசியின் தந்தை தங்கபாண்டியனை சிபிசிஐடி போலீசார் நேற்று மதியம் திடீரென கைது செய்தனர்.  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: