ட்வீட் கார்னர்...

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக பாகிஸ்தான் வீரர்கள் கராச்சியில் இருந்து நேற்று மான்செஸ்டர் புறப்பட்டனர். விமானத்தில் வீரர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் படத்தை பாக். கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட 10 வீரர்கள் இங்கிலாந்து செல்லவில்லை. அவர்கள் பாகிஸ்தானிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாற்று வீரர்கள் 5 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவு வந்த பிறகு அவர்களின் பயண ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: