அர்ஜென்டீனா கால்பந்து வீரரும் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி நேற்று முன்தினம் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பார்சிலோனா, அர்ஜென்டீனா அணி வீரர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள விளையாட்டு பிரபலங்கள், ஃபிபா நிர்வாகிகள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் பாலன் டிஆர் விருதுகளை 6 முறை கைப்பற்றிய மெஸ்ஸியை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். தனது 18வயதில் அர்ஜென்டீனாவின் தேசிய அணியில் இடம் பிடித்தவர் 2 உலக கோப்பை உட்பட 138 சர்வதேச போட்டிகளில் விளையாடி நாட்டுக்காக 70 கோல்களை அடித்துள்ளார்.
யு20 உலக கோப்பையை அர்ஜென்டீனாவுக்காக வென்று தந்த மெஸ்ஸி, தொடர்ந்து 2014 உலக கோப்பையில் அர்ஜென்டீனா 2வது இடம் பிடிக்க காரணமாக இருந்தார்..