கோவில்பட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு காரணமாக கோவில்பட்டியில் பள்ளிகளில் செயல்பட்டு வந்த நகராட்சி தினசரி சந்தைகள் செண்பகவல்லியம்மன் கோயில் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கூடுதல் பேரூந்து நிலையம், வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏ.வி. மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடமாற்றப்பட்டன. இங்கு மக்கள் சமூக விலகல் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, ஜூன் 15ம்தேதி முதல் தமிழகம் முழுவதும் துவங்குகிறது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான மையங்களில் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ளுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வால் பள்ளிகளில் செயல்பட்ட காய்கறி சந்தைகள் செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு மாற்றம்
- 10 ஆம் வகுப்பு பொது மக்கள்
- பரிமாற்ற
- காய்கறி சந்தைகள்
- ஷென்பகவள்ளியம்மன் கோயில்
- ஷென்பகவல்லியம்மன் கோயில்