மதுரை: மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஒருவர் தனது மனைவியுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் ரூ.400 கட்டணம் பெறப்பட்டு, அதற்கு ரசீது தரப்பட்டது. அதில் ஆலோசனைக் கட்டணம் ரூ.300ம், அதற்கு கீழே கொரோனா கிருமி நாசினிக்கென ரூ.100ம் என இருந்துள்ளது. இது ஆச்சர்யம் அளித்ததால், பில் கவுண்டரில் இருந்த பெண்ணிடம் இதுகுறித்து கேட்டபோது, கொரோனா வைரஸ் கிருமி நாசினிக்கென ரூ.100 வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கிருமிநாசினி யாரும் தரவில்லையே என்று அவர் கேட்டபோது, வாசலில் இருக்கும் செக்யூரிட்டி, அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கையில் 2 துளிகள் ஹேன்ட் சானிடைசரை ஊற்றியதற்காகவே, இந்த தொகையை வசூலித்திருப்பது தெரிந்தது.