×

மாணவனுக்கு கத்திக்குத்து

சென்னை: சென்னை உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவன் அஜித்குமார் (22), நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 4 பேர் அவரை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், அஜித்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : student , Student, shout
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...