ஜெய்ப்பூர்: ரயிலில் வந்த பெண் திடீரென சுருண்டு விழுந்து இறந்ததால், அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த 92 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.மும்பையில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் மும்பை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வந்து நின்றது. அப்போது, ஒரு பெட்டியில் இருந்து இறங்கிய 65 வயது பெண் ஒருவர், பிளாட்பாரத்தில் காலடி எடுத்து வைத்ததும் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். அவருடைய சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிறகு சளி மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.