சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,48,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.10,44,7425 அபராதமாக போலீசார் வசூலிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும் 5ம் கட்ட நடைமுறையாக கடந்த 1ம் தேதி முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அரசு உத்தரவை மீறி வாகனம் ஓட்டியதாக நேற்று வரை போலீசார் 5,48,842 வழக்குகள் பதிவு செய்து 5,89,794 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.