சேலம்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தனராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக முதல் இரு மாதத்தில் வாகனங்களை இயக்காமல் இருந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு, மிக குறைந்த வாகனங்களே இயக்கப்பட்டன. தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டாலும், தொழிற்சாலைகளில், பெரிய அளவில் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இதேபோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது.